இலங்கையில் மேலும் ஐவர் சாவு! உயிரிழப்பு 66 ஆக உயர்வு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தகவல் அறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை 398 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 18 ஆயிரத்து 75 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 210 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post