மேலும் 8 கோவிட் -19 நோயாளிகள் சாவு; கொரோனா காவு கொண்டோர் எண்ணிக்கை 107!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று வெள்ளிக்கிழமை (நவ.27) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.

87, 54, 78, 36, 83, 69, 70 வயதுடைய 4 பெண்கள், 4 ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 8 வாரங்களில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 22 ஆயிரத்து 501 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 226 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post