யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்குக் கொரோனா!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (நவ.23) திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 322 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் நால்வருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படும் இருவருக்கும் கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் யாழ்ப்பாதம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post