யாழில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிவந்த திருமதி தமிழினி பிரபாகரன் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

இணுவிலைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த உத்தியோகத்தர் ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 16 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்ததாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post