நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவுகளைக் கொட்டிய விசமிகள்! (படங்கள்)


நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால்; மாமிசக் கழிவுகளுடன் கூடிய மூட்டை ஒன்று இனந்தெரியாத நபர்களினால் போடப்பட்டுள்ளது.

இதனால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால் ஆலய சூழல் பாதிக்கப்பட்டதுடன், அவ் வீதியால் பயணித்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெ.கிரிதரனின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த கழிவுகள் எரியூட்டப்பட்டுப் புதைக்கப்பட்டது.

இவ்வாறான சமூகப் பொறுப்பற்றவர்களின் செயற்பாடுகளால் சுற்றுச் சூழல் மாசடைவதுடன். சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றது.

எனவே இவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






Previous Post Next Post