நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

இன்றைய தினத்தை போன்றே நாளையும் (4) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (4) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறே, மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாகும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post