முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பு நீதிவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் இம்மாதம் 18ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் நாட்டில் இடம்பெற்ற பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Previous Post Next Post