யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் நீர் இறைக்கும் மோட்டர் இருந்த அறையில் உள்ள மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவில் சிக்கியே இளைஞன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இணுவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது-26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
Previous Post Next Post