கியூ.ஆர். முறைமையில் எரிபொருள்! யாழில் நடக்கும் முறைகேடு!! பலர் பாதிப்பு!!!

எரிபொருள் வழங்கும் நடைமுறையில் கியூ .ஆர் கோட்டின் மட்டுமே பதிவு செய்ததால் வடமராட்சியில் ஒருவர் பெட்ரோல் பெறாது ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார்.

வடமராட்சியில் இன்று புதன்கிழமை எரிபொருள் விநியோகம் நடைபெற்றது. இதன் போது பல மணி நேரமாக காத்திருந்தவர் எரிபொருளினை பெறுவதற்கு கியூ ஆர் கோட்டினை பதிவு செய்தபோதே அவ் இலக்கத்திற்கு

15 நிமிடங்களுக்கு முன்பதாக மோட்டார் சைக்கிளுக்கு குறித்த கீயூ ஆர் குறியீட்டுக்கு பெற்றோல் வழங்கப்பட்டமை தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார். அவ் இலக்கத்திற்கு கடந்த வாரமும் பெற்றோல் வழங்கப்பட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால் உரிமையாளர் அதனைப் பெறவில்லை.

பருத்தித்துறையில் கடந்தவாரமும் ஐவர் இவ்வாறு ஏமாற்றத்துடன் திரும்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பருத்தித்துறை பொலிசில் எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை.

எனவே கியூ ஆர் கோட்டினை மட்டும் பரிசோதிக்காது வாகன இலக்கத்தையும் பரிசோதிக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post