கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞன் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய்) என்ற இளைஞனே கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று கனடா நேரம் இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post