யாழில் தீபாவளித் தினத்தில் நடந்த துயரம்! இரு இளைஞர்கள் கிணற்றில் விழுந்து சாவு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

லம்போசிகனின் குடும்பத்திற்கு சொந்தமாக தோட்டக் காணியில் தீபாவளியை முன்னிட்டு 6 இளைஞர்கள் ஒன்றுகூடி மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர். கிணற்றுக்கட்டில் இருந்து மது அருந்திய போது, லம்போசிகன் கிணற்றிற்குள் விழுந்துள்ளார்.

அவரை மீட்க கிணற்றிற்குள் குதித்த மற்றைய இளைஞனும் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post