
இங்கு தங்குவதற்கு வசதியாக இருப்பதாகவும், குறிப்பாக காலை சுவையான உணவு குழந்தைகள் சிறுவர்களுக்கு பால் மற்றும் தேவையான பொருட்களை வழங்கப்படுவதுடன், தன்னார்வலர்கள் குழுவினரும் வருகை தருவதாக இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளும் செயல்பாட்டுத் துறைகளும் இலங்கையர்கள் தங்கியுள்ள பகுதியை சுத்தம் செய்ய பணியாளர்களை அனுப்பியுள்ளனர். குளிக்க மற்றும் மலசலகூட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இது இவ்வாறு இருக்க இலங்கையர் ஒருவர் சிகரெட்டும் வாங்கும் படமொன்றையும் வியட்நாம் TouTre newspaper வெளியிட்டுள்ளது.
இவர்களுக்கான உதவிகளை வியட்நாமில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஒழுக்கமைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.




