வியட்நாமில் சகல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள்! சிகரெட்டு வாங்கும் படமும் வெளியாகியது!! (படங்கள்)

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு மியன்மாரில் தக்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளை வியட்நாமின் பொலிஸ் கேணல் அதிகாரி டிரான் வான் பார்வையிட்டதுடன் வியட்நாம் அரசு மற்றும் செயல்பாட்டு முகமைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும் என தெரிவித்துள்ளார்.

இங்கு தங்குவதற்கு வசதியாக இருப்பதாகவும்,  குறிப்பாக காலை சுவையான உணவு குழந்தைகள் சிறுவர்களுக்கு பால் மற்றும் தேவையான பொருட்களை வழங்கப்படுவதுடன்,  தன்னார்வலர்கள் குழுவினரும் வருகை தருவதாக இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர். 

அதிகாரிகளும் செயல்பாட்டுத் துறைகளும் இலங்கையர்கள்  தங்கியுள்ள  பகுதியை சுத்தம் செய்ய பணியாளர்களை அனுப்பியுள்ளனர். குளிக்க மற்றும்  மலசலகூட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இது இவ்வாறு இருக்க இலங்கையர் ஒருவர் சிகரெட்டும் வாங்கும் படமொன்றையும் வியட்நாம் TouTre newspaper வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கான உதவிகளை வியட்நாமில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஒழுக்கமைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post