கார்-ஆட்டோ மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! காரில் வந்த யுவதி மீது மக்கள் விளக்குமாறால் தாக்கும் காட்சி!! (வீடியோ)

கட்டுப்பாடற்ற வேகத்தினால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.

இவ் விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த காரில் ஐந்து பேர் பயணித்தாகவும் நான்கு போர் தப்பியோடிய நிலையில் பெண் ஒருவரை மடக்கிப் பிடித்த அப் பகுதி மக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றிரவு களியாட்ட விடுதியில் இருந்து புறப்பட்ட சொகுசு காரொன்றே இவ்வாறு வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Previous Post Next Post