![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjECGZlz2y3Opj67BzxAAgXQeMtcCN7Jl-qVZKZyBpFDw4-tliw-_df6UCY1Ai89R0vrLc8b5hMZC2SKEb3Df3gew51ORoGwszZXBepGvGAikpPVvpSXCbTN4QcGHLhCWbq1m5tlFI3vQ6LO5ggEvMJHUkCmdtG34vnUO2nk7pbrOtMdVJX-xiApI5F/s16000/Vietnam-internment-camp-arrive-in-Sri-Lanka-DC.png)
கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்ல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்தனர்.
லேடி ஆர் 3 படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழும் நிலையில் அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டார்.
இதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரகம் வியட்நாம், சிங்கபூர், பிலிப்பையின்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை கடற்படை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாறி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடம் மீண்டு நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக முகாமில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாடு திரும்பும் இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைவர்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை வியட்நாமில் சிக்கிய இலங்கையர்களில் இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.