யாழில் பட்டதாரி மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! வெளியான காரணம்!!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் பட்டதாரி மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். சுழிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (28) இரவு இச் சம்பவம் நடந்தது.

சற்குணரத்தினம் கௌசி (27) என்ற யுவதியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற இந்த மாணவி அண்மையில்தான் பட்டம் பெற்றிருந்தார்.

குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துள்ளதக குறிப்பிடப்படுகிறது.

யுவதியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பட்டமளிப்புக்கு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது.
Previous Post Next Post