யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்! பெற்றோல் குண்டும் வீச்சு!! பெண்ணொருவர் காயம்!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று மீது பெற்றோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெற்றோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post