யாழில் தீக்கிரையாகிய பேருந்து! (படங்கள்)

யாழ்ப்பாணம், மானிப்பாய், ஆனைக்கோட்டைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் Tata ரக வெள்ளைப் பேருந்து ஒன்றே தீயில் கருகியுள்ளது.

ஆனைக்கோட்டை, சாவல்கட்டுப் பகுதியில் உரிமையாளரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த பேருந்து தீக்கிரையாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post