சுவிஸிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

வவுனியா - தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post