தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர்.கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், சந்தைக் கூடங்கள் போன்றவற்றில் மக்கள் மத்தியில் தமது நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


