
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கடந்த 18 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த பொன்னையா ஜீவராஜா (வயது-56) என்பவரே அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர்.
புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர்.
இவரின் சகாக்கள் மூவரினால் சித்திரவதை செய்யப்பட்டே அவர் கொலை செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் அங்கு தங்கியிருந்த 52 மற்றும் 42வயதுகளையுடைய வேறு இரண்டு இலங்கைப் பிரஜைகளை குசன்வீல் பொலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
தமிழர்களான இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டவரது வீட்டில் வாடகை இன்றி வசித்து வந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சமயம் இருவரும் மது போதையில் இருந்தனர் என்று பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் ஒருவரும் பின்னர் கைதாகியுள்ளார். இலங்கையரான அவரது விவரங்கள் வெளியாகவில்லை.
கொலை தொடர்பான விசாரணைகளை குசன்வீல் பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் அங்கு தங்கியிருந்த 52 மற்றும் 42வயதுகளையுடைய வேறு இரண்டு இலங்கைப் பிரஜைகளை குசன்வீல் பொலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
தமிழர்களான இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டவரது வீட்டில் வாடகை இன்றி வசித்து வந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சமயம் இருவரும் மது போதையில் இருந்தனர் என்று பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் ஒருவரும் பின்னர் கைதாகியுள்ளார். இலங்கையரான அவரது விவரங்கள் வெளியாகவில்லை.
கொலை தொடர்பான விசாரணைகளை குசன்வீல் பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.