யாழில் தீயில் வீழ்ந்த குடும்பப் பெண் உயிரிழப்பு! காலையில் கணவன் விழித்தபோதே அறிந்த பரிதாபம்!!


யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் குப்பைக்கு மூட்டிய தீக்குள் வீழ்ந்து உயிழந்துள்ளார்.

குப்பிளான் தெற்கு பகுதியை சேர்ந்த சுதாகினி அன்னலிங்கம் (வயது- 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று அதிகாலை வேளை வீட்டில் உள்ளோர் நித்திரையால் எழ முன்னர் தான் நித்திரையால் எழுந்து வீட்டு காணியினை கூட்டி குப்பைகளுக்கு தீ வைத்துள்ளார். அந்த தீயில் முக குப்புற விழுந்து கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

காலை கணவன் எழுந்து மனைவியை தேடிய போதே எரிந்த குப்பைகளுடன் மனைவியின் சடலம் காணப்பட்டதனை அவதானித்து சுன்னாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்த்துடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

குடும்பப் பெண் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும் , அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் காலை குப்பை மூட்டிய பின்னர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக எரிந்துகொண்டிருந்த குப்பைக்கு மேல் விழுந்திருக்கலாம் என உறவினர்கள் இறப்பு விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post