யாழில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி விபத்து! வர்த்தக நிலையங்களும் சேதம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - சிவலிங்கப்புளியடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காங்கேசன்துறை வீதி சிவலிங்கப்புளியடி சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன ஒன்றன் பின் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் மோதியதில் அருகில் இருந்த வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Previous Post Next Post