![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAvZURSIrY5ojA4u-EryflguEh6ZPjbSsNzzjwZQIJK9ON2OirHSBcjkm5iI5EmcHVCJODJNpJtmDikvHsqAyWItuWcfLQECAMnlfJl19KA8-dqAVB8KKyij9vp16bhU4GZS_fftrKsYBzEha38ej0zJhyV4k1qKiA17LcR-wdFQ907vsOqJgT3q7k/s16000/0.jpg)
ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது நிறை போதையில் நிலை தடுமாறி கிணற்றினுள் விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.