பெண்ணை அடையாளம் காண உதவுமாறு மக்களிடம் பொலிஸார் கோரிக்கை! (வீடியோ)

கொள்ளுப்பிட்டி கார் விபத்தின் பின்னர் காரில் பயணித்த பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்ணை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு 0718 59 15 78 அல்லது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0718 59 15 79 க்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071 - 859 15 78 என்ற இலக்கத்திற்கு கொழும்பு தெற்கு ASP, 071-859 15 79 என்ற இலக்கத்தில் கொள்ளுப்பிட்டி OIC அல்லது 0744 - 859 என்ற இலக்கத்திற்கு கொள்ளுப்பிட்டி போக்குவரத்து OIC க்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி, SSP நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோருகின்றார்.

தொடர்ப்புடைய செய்தி: 
Previous Post Next Post