பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸ் புறநகர் பகுதி வாழ் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாரிஸி்ன் புறநகர் பகுதியான சென் ஏ மார்ன் உட்பட பல பகுதிகளில் போலி பொலிஸாரால் மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உண்மையான பொலிஸ் அதிகாரிகளின் சீருடையை ஒத்த வகையில் காணப்படும் போலி பொலிஸாரால் மக்கள் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த போலி பொலிஸ் அதிகாரிகள் வயோதிபர்கள் உள்ள வீடுகளை நோட்டமிட்டு குறி வைப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு இரண்டு பேர்களாக இந்த போலி பொலிஸ் அதிகாரிகள் வீடுகளுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர்களில் ஒருவர் தாம் திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக கூறும் நிலையில் மற்றைய நபர் வீட்டிற்குள் ஏதாவது ஒரு பொருளை திருடி விடுவதாக தெரியவந்துள்ளது.

எனவே இவர்கள் தொடர்பில் மக்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென பிரான்ஸ் பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
Previous Post Next Post