யாழில் கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி -மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய நந்தகுமார்  திருமுருகன் சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் இடம் பெற்று வந்தது.

நீராடச் சென்ற மூவரில் ஒரு சிறுவன் மட்டுமே காணாமல் போயுள்ள நிலையில் மற்றொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுவனை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடிய வந்த நிலையில், இன்றைய தினம் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: 
Previous Post Next Post